தேர்தலில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் நிலை குறித்து டிடிவி தினகரன் பேசியுள்ளார். இது தொடர்பாக அவர் பேசுகையில், நீதிமன்றத்தில் வழக்குகள் இருப்பதால் ஓபிஎஸ் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட முடியாத நிலை உள்ளது. அவருடைய விருப்பப்படியே ராமநாதபுரத்தில் போட்டியிடுகிறார். என்னை பொறுத்தவரை பாஜக நிர்பந்திக்கவில்லை. தொகுதிகள் ஒதுக்கிய பிறகு எங்கள் கட்சி வேட்பாளர்களை அறிமுகம் செய்வேன் என்று தெரிவித்த டிடிவி, எடப்பாடி பழனிச்சாமி திருந்தினால் மட்டுமே அதிமுகவை பலப்படுத்த முடியும் என்று கூறினார்.