கேரள மாநிலம் எர்ணாகுளம் மற்றும் வேளாங்கண்ணி சிறப்பு ரயில்களின் சேவை செப்டம்பர் மாதம் வரை நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தற்போது கூட்ட நெரிசல் அதிகமாக இருப்பதால் கேரள மாநிலம் எர்ணாகுளம் மற்றும் வேளாங்கண்ணி இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள் சேவை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்த நிலையில் வருகின்ற செப்டம்பர் மாதம் வரை நீட்டித்து இயக்கப்பட உள்ளது.

அதன்படி எர்ணாகுளம் மற்றும் வேளாங்கண்ணி இடையே வாராந்திர சிறப்பு ரயில் சனிக்கிழமைகளில் மதியம் 1.10 மணிக்கு இயக்கப்படும் எனவும் வேளாங்கண்ணி மற்றும் எர்ணாகுளம் இடையே வாராந்திர சிறப்பு ரயில் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 6.40 மணிக்கு இயக்கப்படும் என்றும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.