சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்தக் காணொளி, இன்றைய இளைஞர்களின் ஆபத்தான போக்கை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. அதிவேகமாகச் செல்லும் ஒரு லாரியின் அடியில், தனது இருசக்கர வாகனத்தை மிகத் துணிச்சலாகவும் ஆபத்தான முறையிலும் ஒரு இளைஞர் ஓட்டிச் செல்கிறார். ஒரு சிறிய தவறு நடந்திருந்தால் கூட அவரது உயிர் அந்த இடத்திலேயே பிரிந்திருக்கும். வெறும் சமூக வலைதளப் புகழுக்காகவும், சில ‘லைக்’குகளுக்காகவும் தனது உயிரையும் மற்றவர்களின் பாதுகாப்பையும் அடமானம் வைக்கும் இத்தகையச் செயல்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
स्टंट के चक्कर में इसे अपनी जान की परवाह भी नहीं है.
सिर्फ एक रील के लिए ऐसा पागलपन pic.twitter.com/BPWU2vLlze
— Priya singh (@priyarajputlive) January 19, 2026
இந்த வீடியோவைப் பார்த்த இணையதள வாசிகள் தங்களது கோபத்தையும் கிண்டலையும் வெளிப்படுத்தி வருகின்றனர். “நம் நாட்டில் ஒருவரின் உயிர்தான் மிகவும் மலிவானது” என்று ஒரு பயனர் கமெண்ட் செய்துள்ளார். மற்றொருவர், “இத்தகைய முட்டாள்தனமான செயல்களில் ஈடுபடுபவர்களை அவர்கள் செய்யும் காரியத்தை வைத்தே அடையாளம் காண முடியும்” என்று கடுமையாகச் விமர்சித்துள்ளார். இத்தகைய ஆபத்தான ஸ்டண்ட்கள் வீரமல்ல, அது ஒரு அறியாமை என்பதை உணர்த்தும் விதமாக இந்த வீடியோ சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது.
