கோவையில் மீண்டும் போட்டியிட உள்ளதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தல் பணிகள் தொடர்பாக கோவையில் இன்று மக்கள் நீதி மய்யத்தின் ஆலோசனைக் குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உரையாற்றிய கமல்ஹாசன், “தேர்தலில் கோவைக்கு வாருங்கள் என தொண்டர்கள் அழைக்கிறார்கள்.. ‘

கோவைக்கு வாங்க’ என கூப்பிடுவது மட்டும் போதாது. வேலை செய்ய 40,000 பேரை தயார் செய்ய வேண்டும். எனக்கு மூக்கு உடைத்தால் பரவாயில்லை. மருந்து போட்டு வந்து, மீண்டும் கோவையில் நிற்கிறேன்” என தெரிவித்துள்ளார்.