இடையில் தடைபட்டிருந்த ‘என் மண், என் மக்கள்’ நடை பயணத்தை பாஜக தலைவர் அண்ணாமலை நாளை முதல் மீண்டும் தொடங்குகிறார். நாளை அவினாசியிலும் அடுத்தடுத்த நாட்களில் பல்லடம் திருப்பூர் தொகுதிகளிலும் நடைபயணம் செய்து மக்களை சந்திக்க இருக்கிறார். அதிமுக உடனான கூட்டணி முறிவுக்கு பின் அண்ணாமலை டெல்லி சென்றதால் நடைபயணம் ஒத்தி வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.