இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையே தொடர்ந்து 9 ஆவது நாளாக போர் நீடித்து வருகிறது. இஸ்ரேல் ராணுவம் காஸா பகுதியில் தொடர்ந்து தீவிர தாக்குதலை நடத்தி வருகிறது. தொடர் போர் பதற்றம் காரணமாக இஸ்ரேலில் உள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில் இஸ்ரேலில் இருந்து இதுவரை 110 பேர் தமிழ்நாடு திரும்பியுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதில், 95% பேர் மேற்படிப்புகளுக்காகவே இஸ்ரேல் சென்றதாக கூறிய அவர், வெளிநாட்டிற்கு எவ்வளவு தமிழர்கள் படிப்புக்காக சென்றுள்ளனர், எவ்வளவு பேர் வேலைக்காக சென்றுள்ளனர் என மொபைல் செயலி மூலம் தகவல்கள் சேகரிக்கப்பட்டு அவர்கள் நலன் குறித்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.