என் கருத்தால் மனது புண்பட்டிருந்தால் திரிஷாவிடம் மன்னிப்பு கோருகிறேன் என அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி. ராஜு தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் இருந்து சமீபத்தில் நீக்கப்பட்ட சேலம் மேற்கு முன்னாள் ஒன்றிய செயலாளர் ஏ.வி ராஜு பிரபல முன்னணி நடிகை குறித்து அவதூறாக கருத்து தெரிவித்திருந்தார். கடந்த 2017 ஆம் ஆண்டு கூவத்தூர் தனியார் ஹோட்டலில் அதிமுக எம்எல்ஏக்கள் தங்கி இருந்தபோது நடிகைகள் அழைத்துவரப்பட்டதாகவும், அதில் குறிப்பாக நடிகை திரிஷாவின் பெயரை வெளிப்படையாக குறிப்பிட்டிருந்தார் ராஜு.

அதாவது அதிமுகவில் எம்எல்ஏவாக இருந்த வெங்கடாசலம் கேட்டதன் பேரில் ரூபாய் 25 லட்சம் கொடுத்து திரிஷாவை கூவத்தூர் ஹோட்டலுக்கு நடிகர் கருணாஸ் அழைத்து வந்ததாகவும், மேலும் பெரும்பாலான நடிகைகள் அங்கு வந்தனர். அதையெல்லாம் வெளிப்படையாக சொல்ல முடியாது என பரபரப்பை கிளப்பினார். இவரது பேட்டி சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து இயக்குனர் சேரன், ஆர்கே செல்வமணி, காயத்ரி ரகுராம், மன்சூர் அலிகான் உள்ளிட்ட திரையுலகினர் பலரும் ஏ.வி ராஜு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் என் கருத்தால் மனது புண்பட்டிருந்தால் திரிஷாவிடம் மன்னிப்பு கோருகிறேன் என அதிமுக முன்னாள் நிர்வாகி ராஜு தெரிவித்துள்ளார். சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டு திரிஷாவிடம் மன்னிப்பு கேட்பதாக ஏவி ராஜு விளக்கம் அளித்துள்ளார். எந்த இடத்திலும் யாரையும் அவதூறாக சொல்லவில்லை, வேறொருவர் சொன்னதைத்தான் நான் குறிப்பிட்டேன். சமூக வலைதளங்களில் சிலர் என் மீது அவதூறான வதந்திகளை பரப்பி வருகிறார்கள். இயக்குனர் சேரன், ஆர்கே செல்வமணி பெயரை குறிப்பிட்டு மன்னிப்பு கோருவதாக ஏவி ராஜு விளக்கம் அளித்துள்ளார்.