கேரளாவைச் சேர்ந்த ஒரு உள்ளடக்க படைப்பாளர் (Content Creator), சமூகவலைதளங்களில் தனது பேருந்து பயணத்தின்போது ஏற்பட்ட துன்புறுத்தல் சம்பவத்தைக் காட்சிப்படுத்திய காணொளியைப் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
“angel__baby0” என்ற பயனர் பெயரில் உள்ளடக்கங்களை பகிர்ந்து வருபவர், இன்ஸ்டாகிராமில் பதிவேற்றிய ஒரு ரீல் வீடியோவில், நெரிசலான பேருந்தில் பாரம்பரிய சேலை அணிந்து அமர்ந்திருக்கிறார். அவருக்கு அருகில் அமர்ந்திருந்த ஒரு நடுத்தர வயது ஆண், தகாத முறையில் திரும்பித் திரும்பிப் பார்த்ததைக் காணொளியில் தெளிவாகக் காணலாம்.
வீடியோவில், அந்த ஆண் தன்னை பார்த்துக் கொண்டிருப்பதையும், பெண் தனது செல்ஃபி கேமரா மூலம் அந்தப் பார்வையை பதிவு செய்வதையும் பார்க்க முடிகிறது. தனது செயல்பாடு பதிவாகிறது என்பதை உணர்ந்த பின்னும், அந்த நபர் எதுவும் நடக்காதது போல் பாசாங்கு செய்து, மீண்டும் அதே முறையைத் தொடரும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
“நீ என்னைத் தவறாகப் பார்த்தால், உன் கண்கள் வெளியே வரும்.
நான் ஒரு புலியைப் போல சொன்னேன், பிறகு பேருந்திலிருந்து இறங்கினேன்.
பெருமையுடன் ஓணம். இந்த ரீலை நான் இடுகையிடுவதற்கான காரணம் – ‘உடைதான் பிரச்சனை’ என சிலர் சொல்வதற்கு பதிலளிக்கவே!”
அதிலும், “இந்த வீடியோவில் நான் முழுமையாக மூடி, பாரம்பரிய சேலை அணிந்திருக்கிறேன். இப்போது சொல்வீர்களா – இது உடை பற்றிய பிரச்சனைதானா? அல்லது மனித மனநிலையைப் பற்றியதா?” என்று கேள்வியெழுப்பியுள்ளார்.
அவர் பின்னர் குறிப்பிட்டதாவது, அந்த நபர் தன்னை தகாத முறையில் தொட முயன்றபோது, அவர் கடுமையாக எதிர்வினை வெளிப்படுத்தியதை அடுத்து, அந்த நபர் பயந்து பேருந்தில் இருந்து இறங்கி விட்டதாக கூறுகிறார். “நான் இதை முழு நம்பிக்கையுடன் சொல்கிறேன் – என் உடையில் எந்தத் தவறும் இல்லை. இது ஒரு மனநோய், ஒரு வக்கிரம்!” என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த வீடியோ மற்றும் பதிவுக்கு பெருமளவு ஆதரவான கருத்துக்கள் குவிந்து வருகின்றன. பெண்களின் பாதுகாப்பு மற்றும் ஆண்களின் பார்வை மூலமான துன்புறுத்தலுக்கு எதிராக பலரும் சுயமாக குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளனர்.
https://www.instagram.com/reel/DOGo2uQgQY_/?igsh=MTY5cGhwa2w3dWVxdQ==
