திருவள்ளூர் மாவட்டம் வடமதுரை கிராமத்தில் வசிப்பவர் ஜெயபிரகாஷ். 40 வயதான இவருக்கு சியாமளா என்ற மனைவியும் மகனும் உள்ளனர் . இவர் அடிக்கடி குடித்துவிட்டு மனைவியை அடிப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.  மேலும்  மனைவியை பணம் வாங்கிக் கொள்ளுமாறு அடிக்கடி துன்புறுத்தி வந்துள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று வழக்கம்போல ஜெயப்பிரகாஷ் குடித்துவிட்டு சியாமளாவை அடித்ததில் மூக்கில் ரத்தம் வந்துள்ளது.

இதனால் ரத்தத்தோடு பெற்றோர் வீட்டிற்கு சென்ற சியாமளாவை பார்த்த அவருடைய தம்பி அருண் கோபத்தில் தன்னுடைய நண்பர் முனியாண்டி என்பவரோடு சேர்ந்து மாமா ஜெயபிரகாஷ் வீட்டிற்கு சென்றுள்ளார் . என் அக்காவிற்கு ரத்தம் வர அளவிற்கு அடிப்பீர்களா என்று கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டதில் அங்கிருந்த இரும்பு ராடை  எடுத்து அருணும், முனியாண்டியும் ஜெயப்பிரகாஷை  சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். . இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்