சென்னை விமான நிலையத்தில் தாய்லாந்தில் இருந்து வந்த விமான பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அப்போது அரிய வகை ஆமைகள் பறிமுதல் செய்யப்பட்டது. அதாவது ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த அரிய வகை ஆமைகள் மற்றும் சிவப்பு நிற காதுகள் கொண்ட ஆமைகள் என மொத்தமாக 500 ஆமைகள் உயிருடன் பறிமுதல் செய்யப்பட்டது.

இதனை முகமது முபின் என்பவர் கடத்தி வந்துள்ளார். இவர் பட்டுக்கோட்டையைச் சேர்ந்தவர். இவரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையின் போது ரவிக்குமார் என்பவருக்கும் கடத்தலில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இவர் மதுரையைச் சேர்ந்த ஆயுதப்படை காவலர் ஆவார். மேலும் இவர்கள் இருவரையும் அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.