நடிகை விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். திரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத், இயக்குனர் கௌதம் மேனன் போன்ற நட்சத்திரக் கூட்டமே நடிக்கின்றனர். படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்புகள் நடைபெற்று வரும் நிலையில் படமானது வரும் அக்டோபர் 19 ல் வெளியாக உள்ளது. இவருடைய படத்தினை எதிர்பார்த்து காத்திருக்கும் ரசிகர் பட்டாளமே உள்ளனர். சமீபத்தில் இவருடைய பிறந்த நாளான ஜூன் 22 இல் இந்த படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் மற்றும் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது. சில சர்ச்சைகளை எதிர்கொண்டாலும், இரண்டுமே பயங்கர ட்ரெண்டிங் ஆனது.

இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததும் விஜயின் கடைசி நாள் படப்பிடிப்பில் அவரோட புகைப்படம் எடுத்துக்கொள்ள ஒட்டுமொத்த படக்குழுவும்  ஆவலாக காத்துக் கொண்டிருத்துள்ளனர். பொதுவாக கடைசி நாள் படப்பிடிப்பில் ஒட்டுமொத்த பட குழு ஒன்றாக சேர்ந்து குரூப் போட்டோ எடுத்துக் கொள்வது வழக்கம். அந்த வகையில் லியோ படத்தில் பணிபுரிந்து அனைவரும் விஜயோடு புகைப்படம் எடுத்துக் கொள்ள ஆசையாக காத்துக் கொண்டிருந்த நிலையில் விஜய் தன்னுடைய படப்பிடிப்பை முடித்துவிட்டு சட்டென்று காரில் ஏறி சென்றுவிட்டார்.

இதை பார்த்து ஒட்டுமொத்த படக்குழுவினரும்ஏமாற்றத்தில் இருந்தார்களாம். விஜய்க்கு அந்த நேரத்தில் வேறு ஏதேனும் வேலை இருந்திருக்கும் என்றும், மற்றொரு நாள் கண்டிப்பாக அவரோடு சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொள்வார்கள் என்றும் தகவல் வெளியாகி  உள்ளது.