தமிழ்நாடு திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் எனப்படும் FEFSI அமைப்பு தொழிலாளர்களின் நலனை கருதி புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது. அதன்படி தமிழ் திரைப்படங்களில் இனி தமிழ் நடிகர்கள் மட்டுமே நடிக்க வேண்டும். தமிழ் படத்தின் படப்பிடிப்பு தமிழ்நாட்டில் மட்டும்தான் நடைபெற வேண்டும். ஏதாவது முக்கிய காரணமாக இருந்தால் மட்டுமே வெளிநாடு மற்றும் வெளிமாநிலத்தில் நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளது. இந்த விதிகளை மீறும் பட்சத்தில் ஒழுங்கு நடவடிக்கை பாயும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.