மக்களவை தேர்தலில் போட்டியிடும் கடலூர் தேமுதிக வேட்பாளர் சிவக்கொழுந்தை ஆதரித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பரப்பரை செய்தார். அப்போது, “என் மனம் வலிக்கிறது, என்ன பாவம் செய்தோம் நாம், மனதில் உள்ள துக்கத்தை கட்டுப்படுத்த முயன்றும் என்னால் முடியவில்லை.

என் துரதிஷ்டம், கேப்டன் விஜயகாந்த் இல்லாமல் நான் இங்கு பிரச்சாரம் செய்ய வந்திருக்கிறேன்” என தலையில் அடித்து தேம்பி அழுதார். கூடியிருந்த தொண்டர்கள் அவரை சமாதானம் செய்தனர்.