அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவில் ஒரு தம்பதி ஜூலை 18-ஆம் தேதி உணவகம் ஒன்றில் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அங்கு அடையாளம் தெரியாத பெண் ஒருவர் வந்து ஒரு மாதமே ஆன பீஞ்சு குழந்தையை தம்பதியிடம் கொடுத்துவிட்டு தன்னால் இனி இந்த குழந்தையை பார்த்துக் கொள்ள முடியாது என்று கூறியதோடு அந்த இடத்தை விட்டு சென்று விட்டார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த தம்பதி அந்த பெண்ணை தடுக்க முயற்சித்துள்ளனர். ஆனால் அதற்குள்ளாக அவர் சென்றுவிட்டார். இதையடுத்து அந்த தம்பதி குழந்தையை காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். குழந்தை முழு உடல் நல ஆரோக்கியத்துடன் தான் இருந்ததாக கூறப்படுகிறது.