பிரான்ஸ் நாட்டில் 17 வயது சிறுவன் சுட்டுக் கொல்லப்பட்டதை தொடர்ந்து அந்நாட்டில் பெரும் கலவரம் வெடித்தது  நான்கு நாட்களாக போராடிய காவல்துறையினர் ஒரு கட்டத்தில் நிலைமையை தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த போராட்டம் தொடர்பாக 200க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது.

இதனிடையே அந்நாட்டின் நீதித்துறை அமைச்சர் நீதிமன்றம் இந்த கலவரம் போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கும் வகையிலான கடுமையான தண்டனைகளை கைது செய்யப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டும் என கருத்து தெரிவித்தார். இந்நிலையில் 700 க்கும் மேற்பட்டவர்கள் கலவரங்கள் தொடர்பாக சிறையில் அடைக்கப்பட்டனர்.