நடிகர் மகேஷ் அங்காடித்தெரு எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இதில் தன் நடிப்பால் அசத்தியிருப்பார். இப்படத்திற்கு பின் அஞ்சலியின் மார்க்கெட் உயர தமிழ், தெலுங்கு என பிஸியாக நடித்து வந்தார். எனினும் நடிகர் மகேஷின் நிலைமை அப்படியில்லை. அதோடு அவர் எங்கே இருக்கிறார் என்பதே தெரியவில்லை. சமீபத்தில் நடிகர் மகேஷ் ஒரு பேட்டியில் தன் சினிமா வாழ்க்கை குறித்து பேசி உள்ளார்.

அதாவது, ஈட்டி, சுந்தரபாண்டியனில் விஜய் சேதுபதி கதாபாத்திரம், மாயாண்டி குடும்பத்தார் என பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இருப்பினும் அதை மிஸ் செய்தேன். அங்காடித்தெரு திரைப்படத்திற்கு பின் திரையுலகில் நிலைத்து நிற்க என்ன செய்யவேண்டும். எப்படி கதைகளை எடுக்கவேண்டும் என எனக்கு கூறித் தர யாருமில்லை. அதனாலேயே என் கேரியர் வீணாக போய் விட்டது என எமோஷ்னலாக பேசி உள்ளார்.