தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சாந்தனு. இவர் பிரபல தொகுப்பாளினி கிகி என்ற கீர்த்தியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் காதலித்துக் கொண்டிருந்த சமயத்தில் திடீரென தீர்த்து தன்னை பிரேக் அப் செய்து விட்டதாக சாந்தனு கூறியுள்ளார். அதாவது நடிகர் சாந்தனு ஒரு பெண்ணுடன் காபி ஷாப்க்கு சென்றுள்ளார். இதைப் பார்த்த கீர்த்தியின் தோழி ஒருவர் அவரிடம் கூறியுள்ளார்.

இதனால் கோபம் அடைந்த கீர்த்தி நடிகர் சாநதனுவை பிரேக்கப் செய்துள்ளார். இருவரும் 8 வருடங்கள் பேசாமல் இருந்த நிலையில் திடீரென ஒரு பார்ட்டியில் சந்தித்துள்ளனர். அப்போது இருவரும் மீண்டும் பேசி சமாதானமாகியுள்ளனர். மேலும் அதன் பிறகு தான் பெற்றோர் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்து கொண்டதாக சாந்தனு கூறியுள்ளார்.