எத்தனால் தயாரிப்பதற்காக சர்க்கரை ஆலைகள் மற்றும் வடிப்பாலைகள் கரும்புகளை பயன்படுத்தக் கூடாது என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. சர்க்கரை விலை உயர்வை கட்டுப்படுத்தும் நோக்கில் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த தடை உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாக குறிப்பிட்டுள்ள மத்திய அரசு, கரும்புச்சாறு அல்லது சர்க்கரை பாகு போன்றவற்றை எத்தனால் உற்பத்திக்கு பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது.