தெலுங்கானா முன்னாள் முதல்வர் கே சி ஆர் வழுக்கி விழுந்ததில் பலத்த காயமடைந்தார். தனது வீட்டில் இருக்கும்போது கால் தடுக்கி விழுந்து படுகாயம் அடைந்த அவர் சோமாஜிகுடா பகுதியில் உள்ள யசோதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு இடுப்பு எலும்பில் முறிவு ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ள தகவலை கேட்டு தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.