என்னை யாரும் மோடிஜி என்று அழைக்க வேண்டாம் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். ஐந்து மாநில தேர்தலில் பாஜக அதிக அளவில் வெற்றி பெற்றுள்ள நிலையில் நேற்று பாஜக நாடாளுமன்ற குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்ட நிலையில் அப்போது பேசிய அவர், தன்னை யாரும் மோடிஜி என்று அழைக்க வேண்டாம், அது உங்களிடமிருந்து என்னை அந்நியப்படுத்துவதைப் போல் உணர்கிறேன் என தெரிவித்துள்ளார்.