தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் நேற்றிரவு தன்னுடைய பண்ணை வீட்டில் தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு இடுப்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சந்திரசேகர ராவ் ஐதராபாத்தில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை கேட்டு அவரது தொண்டர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.