திருச்சி மாவட்டத்தில் உள்ள வைப்பூர் பகுதியில் ரவிச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரசன்னா(24) என்ற மகன் உள்ளார். இவர் கல்லூரியில் படித்த ஜோதிகா என்ற பெண்ணை காதலித்துள்ளார். இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இதுகுறித்து அறிந்த பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனால் காதலர்கள் வீட்டை விட்டு வெளியேறி இனாம்சமயபுரம் ஆதி மாரியம்மன் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். இதனையடுத்து காதலர்கள் பாதுகாப்பு கேட்டு சமயபுரம் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். பின்னர் போலீசார் இரு வீட்டு பெற்றோரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி ரவிச்சந்திரன் பெற்றோருடன் புதுமண தம்பதியினரை அனுப்பி வைத்தனர்.