திருச்சி மாவட்டத்தில் உள்ள புதுமணியாரம்பட்டியில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் விஜயலட்சுமி என்ற பெண்ணை காதலித்தார். கடந்த ஜூலை மாதம் பெண் வீட்டாரின் எதிர்ப்பை மீறி வெங்கடேசனும், விஜயலட்சுமியும் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு விஜயலட்சுமி தனது கணவருடன் புது மணியாரம்பட்டியல் வசித்து வந்தார்.

இந்நிலையில் குடும்ப பிரச்சனையால் மன உளைச்சலில் இருந்த விஜயலட்சுமி கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை குடும்பத்தினர் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி விஜயலட்சுமி பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.