பேராசிரியர் ஒருவர் தனது வகுப்பறையிலேயே மாணவர்களுக்கு சாக்லேட் வழங்கும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் தங்களது பள்ளி, கல்லூரி நாட்களை நினைவுகூர்ந்து மிகவும் உணர்ச்சிவசப்பட்டு கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் “எங்களுக்கும் இது போன்ற அன்பான ஆசிரியர்கள் கிடைத்திருக்கலாம்” என்றும், “இவரல்லவா உண்மையான ஆசிரியர்” என்றும் பலரும் தங்களது ஏக்கத்தையும் பாராட்டுகளையும் கமெண்ட்டுகளில் தெரிவித்து வருகின்றனர்.

“>

இதனால் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையே இருக்கும் அன்பான பிணைப்பை அழகாக வெளிப்படுத்தும் இந்த வீடியோ, இணையவாசிகள் பலரின் இதயங்களை நெகிழச் செய்து, சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.