எங்களை விமர்சிப்பவர்களை கூட்டணியில் வைத்திருக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அண்ணாமலையை கடுமையாக தாக்கியுள்ளார். அதிமுக பிரம்மாண்ட மரம் என்றும் பாஜக ஒரு சிறு செடி என்றும் விமர்சித்த ஜெயக்குமார், ” எங்களுக்கு சூடு சொரணை உண்டு. எங்களை மிதித்தால் திருப்பி மிதிப்போம். எங்கள் கண்டனம் டெல்லி வரை கேட்கும். அண்ணாமலை தலைமைக்கு தகுதி இல்லாதவர்.

பாஜகவில் மாநில தலைமைப் பொறுப்பை வகித்தவர்கள் இதுபோன்று பேசியது இல்லை. அண்ணாமலை நாவடக்கத்துடன் பேச வேண்டும் என்றார். மேலும், அதிமுகவை விமர்சிக்கும் போக்கை அண்ணாமலை தொடர்ந்து கடைப்பிடித்தால், கூட்டணி குறித்து மறுபரிசீலனை செய்ய நேரிடும், ஜெயலலிதா குறித்து அவரின் பேச்சு கண்டிக்கத்தக்கது என்றார்.