கத்துக்குட்டியான அண்ணாமலை அடிக்கடி அதிமுக மீது சேற்றை வாரி தெளிப்பது வன்மையாக கண்டிக்கத்தக்க ஒன்று. அவர் மாநிலத் தலைவர் பதவிக்கே தகுதியற்றவர் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், பாஜகவில் மாநில தலைமைப் பொறுப்பை வகித்தவர்கள் இதுபோன்று பேசியது இல்லை.

அண்ணாமலை நாவடக்கத்துடன் பேச வேண்டும் என்றார். மேலும், அதிமுகவை விமர்சிக்கும் போக்கை அண்ணாமலை தொடர்ந்து கடைப்பிடித்தால், கூட்டணி குறித்து மறுபரிசீலனை செய்ய நேரிடும், ஜெயலலிதா குறித்து அவரின் பேச்சு கண்டிக்கத்தக்கது. கூட்டணி தர்மத்தை மீறி பேசுகிறார் என்று ஜெயக்குமார் தெரிவித்தார்.