பாஜக தலைவர் அண்ணாமலையை கண்டித்து புதுச்சேரி அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஜெயலலிதா ஊழல் வழக்கில் சிறை சென்றவர் என்று அண்ணாமலை பேசியிருந்தார். இதற்கு அதிமுக சார்பில் ஜெயகுமார் கடுமையான கண்டனங்களை தெரிவித்திருந்தார். இந்நிலையில் புதுச்சேரி அதிமுக செயலர் அன்பழகன் தலைமையில் உப்பளம் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஏற்கனவே கூட்டணியை மறுபரிசீலனை செய்வோம் என்று எச்சரித்திருந்தார் ஜெயக்குமார்