கோவையில் மலைவாழ் மக்களுடைய வாழ்வாதாரத்தை பாதிக்கும் விதமாக கட்டுமானங்கள் கட்டப்பட்டு இருப்பதாக வெள்ளியங்கிரி மலை பழங்குடியின பாதுகாப்பு சங்க தலைவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.  இந்த வழக்கு மீதான விசாரணையில் ஈஷா யோகா மையத்தில் ஆதியோகி சிலை மற்றும் அதன் அருகில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களுக்கு அனுமதி பெறவில்லை என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் ஈஷா யோகா மையம், ஆதியோகி சிலைக்கான உரிய ஆவணங்கள் எங்களிடம் இருக்கிறது. அதை சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி அதிகாரிகள் முன்பு சமர்ப்பிப்போம் . எங்கேயும் எப்போதும் சமர்ப்பிக்க தயாராக இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளது