தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த ஆண்டு பள்ளி மாணவர்களுக்காக காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார். இங்க திட்டத்தின் அடுத்த கட்டமாக காலை உணவு திட்டத்தை தமிழகம் முழுவதும் உள்ள 31,000 பள்ளிகளுக்கு விரிவு படுத்தப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்த நிலையில் இன்று இந்த திட்டத்தை திருவாரூர் மாவட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்து மாணவர்களுக்கு உணவு பரிமாறினார்.

இந்த திட்டத்தின் மூலம் 15 லட்சம் மாணவர்கள் பயனடைவார்கள். இந்நிலையில் இந்த திட்டத்திற்காக நன்றி தெரிவிக்கும் வகையில் #TNBreakfastScheme, #ThankYouCMSir உள்ளிட்ட ஹேஷ்டேக்குகள் ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் உள்ளது.