EPF ஓய்வூதியதாரர்களுக்கு ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கு முன்பு ஓய்வு பெற்ற அதிக ஊதியத்தில் அதிக ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு திடீரென நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. பணியில் இருக்கும் போது அதிக சம்பளத்தில் EPFபங்களிப்பை செலுத்த 8.33 சதவீதம் பங்கை ஓய்வூதிய நிதிக்கு செலுத்த பணியாற்றும் நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்ட கூட்டு விருப்பச் சான்றுகளை ஒப்படைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இல்லையென்றால் இந்த நடவடிக்கைக்காக அதிகப்படியான ஓய்வூதிய தொகை வசூலிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.