உத்திர பிரதேச மாநிலத்தின் உள்ள வாரணாசியில் பிரசித்தி பெற்ற காசி விஸ்வநாதர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சிறுதானியங்களால் செய்யப்பட்ட லட்டுவை பிரசாதமாக கொடுப்பதற்கு தற்போது முடிவு செய்துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடியின் மக்களவைத் தொகுதி தான் வாரணாசி. இந்த வருடம் சர்வதேச சிறுதானியங்கள் வருடமாக கடைபிடிக்கப்படுவதால் பிரதமர் நரேந்திர மோடி சிறு தானியங்களின் பயன்பாடு தொடர்பான விழிப்புணர்வை பொதுமக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என அடிக்கடி பேசி வருகிறார்.

அந்த வகையில் தற்போது காசி விஸ்வநாதர் ஆலயத்தில் சிறுதானியங்களால் தயாரிக்கப்பட்ட ஸ்ரீ அன்னபிரசாதம் வழங்கப்பட இருக்கிறது. மேலும் சிறுதானியங்களால் செய்யப்பட்ட லட்டு பிரசாதத்தின் விலையில் எந்தவித மாற்றமும் இருக்காது எனவும், அதன் தரம் கண்டிப்பாக உறுதி செய்யப்படும் எனவும் கோவில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.