சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு காணொளி, பார்ப்போரை மிகுந்த துயரத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது. வெறிநாய்க் கடியால் (Rabies) பாதிக்கப்பட்ட ஒரு நபர், தண்ணீர் குடிக்க முடியாமல் தவிப்பதோடு, நீரைப் பார்த்தாலே கடும் அச்சமடைந்து உடல் நடுங்கும் காட்சிகள் அதில் பதிவாகியுள்ளன. ‘ஹைட்ரோபோபியா’ (Hydrophobia) எனப்படும் இந்த நிலையில், நோயாளி தண்ணீரை விழுங்க முயற்சிக்கும்போது அல்லது அது குறித்த எண்ணம் வரும்போதே தொண்டையில் கடுமையான தசைப்பிடிப்புகள் ஏற்பட்டு மூச்சுத் திணறல் உண்டாகிறது.
Video depicts a man with rabies suffering from hydrophobia. The disease induces severe throat spasms, both when trying to swallow and even at the thought of swallowing. Rabies is almost always fatal once clinical symptoms emerge. pic.twitter.com/t0hWkJtYCx
— Morbid Knowledge (@MorbidKnowledge) January 3, 2026
ரேபிஸ் நோய் என்பது ஒருமுறை அதன் அறிகுறிகள் வெளியே தெரியத் தொடங்கிவிட்டால், அதிலிருந்து மீள்வது என்பது கிட்டத்தட்ட சாத்தியமில்லாத ஒன்றாகிறது. ஒரு சிறிய கவனக்குறைவு அல்லது முறையான தடுப்பூசி போடாதது எவ்வளவு பெரிய ஆபத்தை விளைவிக்கும் என்பதற்கு இந்தத் துயரமான காணொளியே சாட்சி. நாய் கடித்த உடனேயே உரிய மருத்துவ சிகிச்சை பெறுவதன் அவசியத்தை இந்தச் சம்பவம் மீண்டும் ஒருமுறை உலகுக்கு உணர்த்தியுள்ளது.
