தமிழகத்தில் பொதுவாக முக்கிய பண்டிகை நாட்கள் மற்றும் உலக பிரசித்தி பெற்ற கோவில் திருவிழாக்களில் அந்தந்த மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அவ்வகையில் திருவாரூர் மாவட்டத்தில் வருகின்ற ஏப்ரல் ஒன்றாம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

உலக பிரசித்தி பெற்ற திருவாரூர் ஆழி தேரோட்டத்தை முன்னிட்டு இன்று  ஏப்ரல் 1ஆம் தேதி பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த விடுமுறை தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பொருந்தாது எனவும் தெரிவித்துள்ளார்.