குளிர்பானங்களில் சேர்க்கப்படும் அஸ்பர்டேம் என்ற வேதிப்பொருளால் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக உலக சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குளிர்பானம், ஐஸ்கிரீம், டூத் பேஸ்ட் மற்றும் இன்ஸ்டன்ட் காப்பி போன்றவற்றில் இனிப்பு சுவையை அதிகரிப்பதற்காக அஸ்பர்டேம் சேர்க்கப்படுகின்றது. இது தொடர்பாக உலக சுகாதார நிறுவனம் நடத்திய ஆய்வில் கல்லீரலில் புற்றுநோய் ஏற்பட ஓரளவிற்கு வாய்ப்பு உள்ளதாக தெரியவந்துள்ளது. இருந்தாலும் இதை தொடர்பான சரியான ஆதாரம் எதுவும் இல்லாததால் மிகவும் குறைவான அளவில் மட்டுமே மனிதர்கள் இதனை உட்கொள்வதாகவும் இதனை பெரிதாக எடுத்துக் கொள்ள தேவையில்லை எனவும் தெரிவித்துள்ளது.