உலக சுகாதார அமைப்பு கொரோனா தொற்று தொடர்பான திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை  வெளியிட்டுள்ளது.

உலக சுகாதார அமைப்பு கொரோனா தொற்று தொடர்பான திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை தற்போது வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது, கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கொரோனா அறிகுறிகளுடன் காணப்பட்டால் அவர்கள் 10 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும் என சிபாரிசு  செய்துள்ளது. மேலும் அறிகுறி இல்லாதவர்கள் ஐந்து நாட்கள் தன்மையில் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. இதனையடுத்து தனிமைப்படுத்தும் காலத்தை குறைப்பதற்கு விரைவு ஆண்டிஜன் பரிசோதனை செய்யுமாறும் கூறியுள்ளது.