அமெரிக்காவின் போர்ப்ஸ் பத்திரிக்கை நிறுவனம் ஆடுதோறும் சக்தி வாய்ந்த 100 பெண்களின் பட்டியலை தயார் செய்யும். அவகையில் இந்த வருடத்திற்கான பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது.

அந்த பட்டியலின்படி உலக அளவில் சக்தி வாய்ந்த பெண்ணாக முதலிடத்தை பிடித்தது ஐரோப்பிய கமிஷன் தலைவர் ஊர்சுலா வாண்டார் லியன், இரண்டாவது இடத்தை பிடித்தது ஐரோப்பிய மத்திய வங்கியின் தலைவர் கிறிஸ்டின் லகார்ட், மூன்றாவது இடத்தை பிடித்தவர் அமெரிக்காவின் துணை அதிபரான கமலா ஹாரிஸ்.

அதேபோன்று இந்த பட்டியலில் இந்தியாவிலிருந்து நான்கு பெண்கள் இடம்பிடித்துள்ளனர். கடந்த நான்கு வருடங்களாக தொடர்ந்து பட்டியலில் இடம் பிடித்து வந்த மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் ஐந்தாவது முறையாக பட்டியலில் இடம் பிடித்துள்ளார். அவரது பெயர் 32 வது இடத்தில் அமைந்துள்ளது.

இந்தியாவை சேர்ந்த இரண்டாவது பெண் hcl டெக் தலைவர் ரோஷினி நாடார் மல்கோத்ரா. இவர் 60வது இடத்தை பிடித்துள்ளார். மூன்றாவது பெண் இந்தியா ஸ்டீல் ஆணைய தலைவர் சோமா மண்டல் 70 வது இடத்தை பிடித்துள்ளார். நான்காவது பெண் பயோகான் நிறுவனத்தின் தலைவர் கிரண் மஜூம்தார் ஷா. இவர் 76 வது இடத்தை பிடித்துள்ளார்.