இந்தோனேஷியா நாட்டின் சுமத்ரா தீவில் எரிமலை வெடித்து ஏற்பட்ட விபத்தில் மலையேற்ற வீரர்கள் 11 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 75 பேர் மலை ஏற்றத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் 46 பேர் பாதுகாப்பாக கீழ இறங்கி விட்டனர் 11 பேரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. மூன்று பேர் உயிருடனும் மீட்கப்பட்டனர். இந்நிலையில் மேலும் 12 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. அவர்களின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன. இதனால் பலி எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது.