இயற்கை சில நேரங்களில் அதன் அழகிய முகத்தைக் காட்டினாலும், சில வேளைகளில் அதின் கொடூரமான, பயமுறுத்தும் உருவத்தையும் வெளிப்படுத்துகிறது. உலகின் ஆபத்தான உயிரினங்களில் பாம்புகள் முன்னணியில் இருப்பது போலவே, உடும்புகளும் குறைவானவை அல்ல. இவ்விரண்டும் நேருக்கு நேர் மோதினால் என்ன நடக்கும்? — இதற்கான பதிலாக ஒரு திகில் நிறைந்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

சுமார் 34 வினாடிகள் கொண்ட இந்த வீடியோவில், ஒரு பெரிய பாம்பு, ஒரு உடும்பை தாக்கி அதன் கழுத்தைப் பிடித்து விடாமல் இழுத்துச் செல்லும் காட்சி பதிவாகியுள்ளது. பாம்பின் பிடியில் தளர்ந்து விட முடியாமல், உயிர் பிழைக்க போராடும் உடும்பு உதவியற்ற நிலையில் காணப்படுகிறது.

இந்த மோதல் காட்சி பலரையும் நடுங்கச் செய்துள்ளது. பாம்பின் வேட்டையாடும் திறன், அதின் பிடியின் வலிமை, இரையை கட்டுப்படுத்தும் உத்தி ஆகியவை இயற்கையின் கொடூர உண்மையை வெளிப்படுத்தும் வகையில் இருந்தன. குறிப்பிடத்தக்கது என்னவென்றால், உயிர் காக்க உடும்பு எவ்விதப் போராட்டமும் நடத்தாதது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

 

இந்த வீடியோவை சமூக ஊடக தளமான ட்விட்டரில் @AmazingSights என்ற ஹேண்டில் பகிர்ந்துள்ளது. சில மணி நேரங்களில் 50,000-க்கும் மேற்பட்ட பார்வைகளைக் குவித்துள்ள இந்த பதிவுக்கு நூற்றுக்கணக்கான லைக்குகளும் கருத்துகளும் குவிந்து வருகின்றன.

ஒரு பயனர், “பாம்பின் உத்தியும் அதன் வலிமையும் ஆச்சரியம் அளிக்கிறது” எனப் பதிவிட்டுள்ளார்.
மற்றொருவர், “இயற்கையின் உணவுச் சங்கிலியை இதுபோல் நேரடியாக பார்க்கும் அனுபவம் வித்தியாசமானது” எனக் குறிப்பிட்டார்.
மேலும், “வலிமை மற்றும் வாய்ப்பு உள்ளவர்கள் மட்டுமே உயிர் பிழைப்பார்கள் — காட்டின் அடிப்படை விதி இது” என கருத்துரைத்தவர்களும் இருந்தனர்.

மேலும் இந்த வீடியோ, இயற்கையில் நடைபெறும் உண்மையான வேட்டையாடும் தருணங்கள் எவ்வளவு திகிலூட்டுவதாக இருக்க முடியும் என்பதை மீண்டும் ஒருமுறை உணர்த்தியுள்ளது.