திமுக கூட்டணியில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற பேச்சு வார்த்தைக்கு பின் இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன். கடந்த தேர்தலைப் போலவே இந்த தேர்தலிலும் உதயசூரியன் சின்னத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி போட்டியிடும் என்று அவர் அறிவித்துள்ளார். வேட்பாளர் இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும் கூறினார்.