உத்திரபிரதேசம் மாநிலம் சீதாப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் பரசுராம். இவருடைய மனைவி பிரேமா தேவி உணவு சமைக்க தாமதமானதால் கடும் பசியிலிருந்த கணவர் மனைவியை அடித்து கொலை செய்துள்ளார். அதன் பிறகு பயத்தில் அவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.