தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் செயல்பட்டு வரும் ECIL என்ற நிறுவனத்தின் Electronics System Design & Manufacturing (ESDM)  பிரிவில் கேண்டின் ஒன்று செயல்பட்டு வருகின்றது. அந்த கேண்டினில் ஊழியர் ஒருவருக்கு பரிமாறப்பட்ட உணவில் சிறிய பாம்பு ஒன்று இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக நிறுவனத்திடம் புகார் அளித்துள்ளார்.

ஆனால் அந்த உணவை உட்கொண்ட ஊழியர்கள் எவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை. இது தொடர்பான புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த கேட்டினில் தினம் தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு உணவு விநியோகம் செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.