இயற்கையாகவோ அல்லது விபத்துக்கள் மூலமாகவோ தங்களுடைய உடல் உறுப்புகளை இழந்தவர்கள் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் மூலமாக மீண்டும் உயிர் வாழ்வதற்கான பல வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. இப்படி கடந்த 15 வருடங்களில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளுக்கான எண்ணிக்கை அதிக அளவில் உயர்ந்து விட்டது .விபத்தில் மூளைச்சவடைந்தவர்கள், இறந்தவர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்களுக்காக உடலில் கல்லீரல் , கணையம் போன்றவற்றை தானம் செய்யும் உறுப்பு மற்றும் அறுவை சிகிச்சைகள் நடத்தப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் கலைஞர் ஆட்சிக் காலத்தில் கடந்த 2008 ஆம் வருடம் செப்டம்பர் மாதம் உறுப்பு மற்றும் அறுவை சிகிச்சை செய்வதற்கான சிறப்பு திட்டம் தொடங்கப்பட்டது.  உடல் உறுப்பு தானம் செய்ய விரும்புவோர் https://transtan.tn.gov.in/ என்ற தமிழக அரசின் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். உங்களுக்கு அருகில் இருக்க கூடிய அரசு மருத்துவ மனைக்கு சென்று ஆதார் அட்டையை கொடுத்தும் உறுப்பு தானம் செய்யலாம். தானமாக பெறப்படும் உறுப்புகள் மற்றும் உறுப்பு வேண்டும் என்று பதிவு செய்பவர்கள் TRANSTAN என்ற இந்த அமைப்பின் மூலம் மட்டுமே பெற முடியும்.