குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்திற்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்  கமலஹாசன் நேற்று சென்னையில் உள்ள் லயோலா கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது கல்லூரி மாணவர்களிடையே பேசிய அவர், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 1,000 வழங்கும் திட்டம் நான் வழங்கிய யோசனை.

எனது யோசனையை தமிழக அரசு எடுத்துக்கொண்டாலும், பொறாமைப்படாமல் பாராட்டுகிறேன் என பெருமிதம் தெரிவித்துள்ளார்.  மேலும்  தற்கொலை குறித்து 20, 21 வயது இருக்கும் போது நானும் யோசித்து இருக்கிறேன். கலை உலகம் என்னை கண்டுகொள்ளவில்லையே என்ற ஏக்கத்தில் யோசித்து இருக்கிறேன். வெற்றி கிடைக்கும் வரை காத்திருக்க வேண்டும், ஒருபோதும் அவசரப்பட கூடாது. வாழ்க்கையின் ஒரு அங்கம் மரணம் என்று கூறியுள்ளார்.