தமிழகத்தில் இன்னும் சில நாட்களில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் அதன் எதிரொலியாக பல்வேறு மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. அதன்படி தமிழகத்தில் இன்று 31 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது திருவள்ளூர் ,சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ஈரோடு, சேலம், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், கரூர், திண்டுக்கல், வேலூர், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், கோவை, நீலகிரி, தென்கா,சி திருநெல்வேலி மற்றும் மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.