தெலுங்கானா மாநிலத்தில் 35 க்கும் மேற்பட்ட குரங்குகளை விஷம் வைத்து கொடூரமாக கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது. பெத்த பள்ளி மாவட்டம் சுல்தானா பாத் மண்டலத்தில் நடந்த இந்த சம்பவம் உள்ளூரில் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த மாவட்டத்தில் குரங்குகள் கொல்லப்பட்டு அவற்றின் சடலங்களை ஒரு பாதையில் வீசியுள்ளனர். சுரங்கத் தொழிலால் மலைகள் உடைக்கப்பட்டு அகற்றப்படுவதால் குரங்குகள் கிராமங்களுக்குள் புகுந்து வருகின்றன.

இதனை தடுப்பதற்காக அவற்றை விஷம் வைத்து கொலை செய்து இருக்கலாம் என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ள நிலையில் இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.