இந்தியாவில் மக்கள் அனைவருமே ரேஷன் கார்டு பயன்படுத்தி வருகிறார்கள். இவ்வாறு ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது ரேஷன் கார்டுகளில் ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டத்தை அரசு செயல்படுத்தி உள்ளது. இந்த திட்டத்தின் மூலமாக ரேஷன் கார்டில் பெயர் உள்ள அனைவருக்கும் இலவச மருத்துவ வசதி வழங்கப்படும். அதாவது ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் ஆயுஸ்மான் கார்டு பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்.

இதன் மூலமாக 5 லட்சம் ரூபாய் வரை இலவச சிகிச்சை வசதி கிடைக்கும். இந்தத் திட்டத்தில் தகுதியுடைய அனைவரும் பயனடைவார்கள். இதுவரை இந்த திட்டத்தில் சேராமல் இருந்தால் நீங்கள் இணைவதற்கு வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது. நீங்கள் ஆயுஷ்மான் கார்டு பெறுவதற்கு உங்களுடைய மொபைல் எண்ணுடன் ஆதார இணைப்பது கட்டாயம். ஆயுஷ்மான் பட்டியலில் உங்கள் பெயர் இருக்க வேண்டும். அதன் பட்டியலில் உங்கள் பெயர் இல்லை என்றால் உங்களுடைய ரேஷன் கார்டு அல்லது தொழிலாளர் அட்டை கொண்டு பெயரை சேர்க்கலாம் என அரசு தெரிவித்துள்ளது.