மத்திய அரசு ஊத்தக்குடி மக்களுக்கு உதவும் நோக்கத்தில் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தை போஸ்ட் ஆபீஸ் மூலம் செயல்படுத்தி வருகின்றது. இந்த திட்டத்தில் இணையும் நபர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 20,500 ரூபாய் வருமானமாக கிடைக்கும். இந்த திட்டத்தில் முதலீடு செய்யப்படும் வைப்புத் தொகைக்கு மாதம் 20 ஆயிரத்து 500 ரூபாய் வட்டியாக மத்திய அரசு மூலம் செலுத்தப்படுகின்றது.

இத்தகைய சேமிப்பு திட்டத்தின் பலனை 60 வயது அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் பெறலாம். இந்த திட்டத்தில் இணையும் நபர்கள் ஆயிரம் மடங்குகளில் முதலீடு செய்ய முடியும். அதாவது பயனர்கள் ஆயிரம் ரூபாய் முதல் 30 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம். இதில் முதலீடு செய்யும் தொகைக்கு அரசு 8 .2 சதவீதம் வட்டி வழங்குகின்றது. இந்த சேமிப்பு திட்டத்தின் முதிர்வு காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும்.