கேரளாவின் மலப்புரம் வெங்கராவில் ஆற்றில் குளிக்கச் சென்ற சகோதரிகள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் வெங்கரை வெட்டுத்தை சேர்ந்த அஜ்மலா (21) மற்றும் அவருடைய சகோதரி புஷ்பா (27) என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். உறவினர் வீட்டுக்கு விருந்துக்கு வந்த இவர்கள் ஆற்றில் குளிக்க சென்றுள்ளனர்.

அப்போது ஆழமான பகுதிக்குச் சென்ற போது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கினர். அவர்களை மீட்டு மளப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அப்பகுதியினர் கொண்டு சென்றனர். இருந்தாலும் அவர்களுடைய உயிரை காப்பாற்ற முடியவில்லை. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.