மணிப்பூர் இம்பால் அருகே மின்னணு வாக்கு இயந்திரம், விவிபேட் இயந்திரம் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மொய்ராங் பகுதியில் வாக்குச்சாவடியை சூறையாடியவர்கள் மின்னணு வாக்கு இயந்திரத்தை தீ வைத்து எரித்தனர். முன்னதாக மணிப்பூர் தமன் போக்பி வாக்குச்சாவடியில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.