பேருந்து முதல் விமானம் வரை பயணம் செய்யும் பயணிகள் தாங்கள் விரும்பும் இருக்கைகளை தேர்வு செய்து கொள்ளும் வசதிகள் உள்ளது. ஆனால் ரயில் பயணத்தில் மட்டும் தங்களுடைய இருக்கையை பயணிகள் தேர்வு செய்ய முடியாது. இதற்கு தொழில் நுட்ப ரீதியிலான காரணங்கள் ரயில்வே நிர்வாகத்தின் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் தற்போது பயணிகள் தங்கள் விரும்பும் சீட்டுகளை பேருந்துகளில் தேர்வு செய்வது போல ரயில்களிலும் இனி தேர்வு செய்து முன்பதிவு செய்து கொள்ள முடியும் என்று தெற்கு ரயில்வே புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது விரைவில் அமல்படுத்தப்படும் என தெரிகிறது